sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீடுகளுக்கு ரேஷன் வினியோகம்; தி.மு.க.,வினர் குறுக்கிடுவதாக புகார்

/

வீடுகளுக்கு ரேஷன் வினியோகம்; தி.மு.க.,வினர் குறுக்கிடுவதாக புகார்

வீடுகளுக்கு ரேஷன் வினியோகம்; தி.மு.க.,வினர் குறுக்கிடுவதாக புகார்

வீடுகளுக்கு ரேஷன் வினியோகம்; தி.மு.க.,வினர் குறுக்கிடுவதாக புகார்


UPDATED : செப் 20, 2025 03:48 AM

ADDED : செப் 20, 2025 01:53 AM

Google News

UPDATED : செப் 20, 2025 03:48 AM ADDED : செப் 20, 2025 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:முதியவர்களின் வீடுகளில் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டத்தில், தி.மு.க.,வினர் குறுக்கீடு செய்வதாக, ரேஷன் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றத்திறனாளி வீடுகளில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை, கடந்த மாதம், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை துவக்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுதும், 21.70 லட்சம் பயனாளிகளின் வீடுகளுக்கு மாதந் தோறும் இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் வாகனங்களில் உணவு பொருட்களை எடுத்துச் சென்று, ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகம் செய்கின்றனர்.

இவ்வாறு வினியோகம் செய்யும் போது, தி.மு.க.,வினர் குறுக்கீடு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:


வாகனத்தில் பொருட்களை எடுத்துச் சென்று தெருவில் நிறுத்தியதும், அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க.,வினர் வந்து, 'வட்ட செயலர் வந்ததும் கொடுக்கலாம்' என்கின்றனர். அவர் வந்து, 'எந்தெந்த கார்டுதாரர்களின் வீட்டிற்கு பொருட்கள் வழங்க போறீங்க; அந்த பட்டியலை காட்டவும்' என்கின்றனர்.

அதை, தங்களின் மொபைல் போனில் போட்டோ எடுத்து விட்டு, 'இவர் இந்த தெருவுக்கு உட்பட்ட கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகி, நீங்கள் பொருட்கள் எடுத்துச் செல்லும் போது, இவரை உடன் அழைத்து செல்ல வேண்டும்' என்று கூறி, ஒருவரை அனுப்புகிறார். அவர் எங்களை சுதந்திரமாக பணி செய்ய விடுவதில்லை.

இதுகுறித்து, கூட்டுறவு இணை பதிவாளர்களிடம் புகார் அளித்தும் பயனில்லை. எனவே, வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில், கட்சியினரின் குறுக்கீட்டை, முதல்வர் ஸ்டாலின் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உத்திரமேரூரில் அலட்சியம்


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில், 135 ரேஷன் கடைகளில், 49,890 கார்டுதாரர்கள் உள்ளனர். அதில் முதியோர், மாற்றுத்திறனாளிகளாக உள்ள, 5,200 கார்டுதாரர்கள் வீடுகளில், பொருட்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான ஊராட்சிகளில், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு, ரேஷன் பொருட்கள் முறையாக சென்றடையவில்லை.
இது குறித்து, விசூர் கிராம மாற்றுத்திறனாளி வேல்முருகன் கூறுகையில்,''மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருந்தும், எங்களுக்கு வீடு தேடி வந்து ரேஷன் பொருட்கள் வழங்கவில்லை. இதனால், 500 மீட்டர் துாரம் சென்று ரேஷன் கடையில் பொருட்களை பெற வேண்டிய சூழல் உள்ளது,'' என்றார்.
இதுகுறித்து, 'கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உத்திரமேரூர் தாலுகாவில், பயனாளிகள் பட்டியலில் விடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்து விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. முழு விபரம் கிடைத்ததும், மாற்றுத்திறனாளி கார்டுதாரர்களுக்கு வீட்டிற்கு சென்று பொருட்கள் வழங்கப்படும்' என்றார்.








      Dinamalar
      Follow us