sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எதிர்கால வளர்ச்சிக்கு கைகொடுக்கும்! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு

/

எதிர்கால வளர்ச்சிக்கு கைகொடுக்கும்! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு

எதிர்கால வளர்ச்சிக்கு கைகொடுக்கும்! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு

எதிர்கால வளர்ச்சிக்கு கைகொடுக்கும்! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு


ADDED : பிப் 02, 2024 12:20 AM

Google News

ADDED : பிப் 02, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:''நாட்டின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது,'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வரவேற்றுள்ளனர்.

மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில், ஜவுளித்துறை சார்ந்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளித்தாலும், லோக்சபா தேர்தல் முடிந்து, புதிய அரசால் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், ஜவுளித் துறைக்கான அறிவிப்பு இடம் பெறும் என்று, ஜவுளித்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் .

''அதிக இளைஞர் சக்தியை கொண்ட இந்தியாவில், தொழில் முனைவு மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக, 1 லட்சம் கோடி ரூபாய், 'கார்பஸ்' நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, ஜவுளித்துறையிலும் பல்வேறு புதிய நுட்பங்களையும், இயந்திரங்களையும் உருவாக்குவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்,'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வலுவான இந்தியாவை கட்டமைக்கும் நோக்கில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டியிடும் திறனை மேம்படுத்தவும், எதிர்கால திட்டமிடுதலுக்கு பட்ஜெட் கைகொடுக்கும்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:


நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக நிதி ஒதுக்கீடு 11.1 சதவீதம் அதிகரித்திருப்பது, கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும்; தொழில் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும். ரயில்வே துறையில் பயணியர் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களுடன் கூடிய நிதி உதவி, போக்குவரத்து செலவை குறைக்க உதவியாக இருக்கும்.கார்பன் சமநிலை குறித்த அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
திருப்பூரை பொறுத்தவரை, கார்பன் சமநிலையை அடைவதற்கான பல்வேறு முயற்சிகள், 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகின்றன. அவற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக மின் பேருந்துகள் அதிகரிக்கக்கூடிய அறிவிப்புகளை வரவேற்கிறோம்.வரும் காலத்தில் தமிழகத்தில் மிக அதிக அளவு மின் வாகனப் பயன்பாடு அதிகரிக்கும்.'மெட்ரோ' ரயில் திட்டம், நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்படாமல் இருப்பதால், அத்திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.



- சக்திவேல், தென்மண்டல பொறுப்பாளர், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்






      Dinamalar
      Follow us