sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு

/

ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு

ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு

ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு

5


UPDATED : மே 27, 2025 10:10 PM

ADDED : மே 27, 2025 09:35 PM

Google News

5

UPDATED : மே 27, 2025 10:10 PM ADDED : மே 27, 2025 09:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை ஈ.சி.ஆரில் உள்ள வி.ஜி.பி.,தனியார் பொழுதுபோக்கு பூங்காவின் ராட்சத ராட்டினத்தில் சிக்கிய 30க்கும் மேற்பட்டோர் 3 மணி நேரத்திற்கு பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ராட்டினத்தில் தவித்து வரும் 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக வி.ஜி.பி., நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாவது:

ராட்சத ராட்டினத்தை இயக்கியபோது மோட்டாரில் திடீரென சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட உடனே ராட்டினத்தை இயக்குவது நிறுத்தப்பட்டது.

உடனே ராட்டினத்தில் சிக்கியிருந்த 30க்கும் மேற்பட்டோரை மீட்க, எங்களிடம் இருந்த கிரேன் மூலம் முயற்சித்தோம். கிரேன் உயரம் குறைவாக இருந்ததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தோம். அவர்கள் வந்து உடன் மீட்பு பணிகள் நடைபெறகிறது. விரைவில் அனைவரும் மீட்கப்படுவர்.

இவ்வாறு வி.ஜி.பி., நிர்வாகம் தரப்பில் கூறினர்.

சிறிதுநேர போராட்டத்துக்குப் பின்னர் ராட்டினத்தில் சிக்கி தவித்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us