sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., கொண்டாட்டம்; மக்கள் திண்டாட்டம்: அண்ணாமலை காட்டம்

/

தி.மு.க., கொண்டாட்டம்; மக்கள் திண்டாட்டம்: அண்ணாமலை காட்டம்

தி.மு.க., கொண்டாட்டம்; மக்கள் திண்டாட்டம்: அண்ணாமலை காட்டம்

தி.மு.க., கொண்டாட்டம்; மக்கள் திண்டாட்டம்: அண்ணாமலை காட்டம்

16


ADDED : ஜூன் 18, 2024 02:37 PM

Google News

ADDED : ஜூன் 18, 2024 02:37 PM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம் அடைந்துள்ளனர் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: ரேஷன் கடைகளில் தடையின்றி பாமாயில், துவரம் பருப்பு வழங்க வேண்டும். திமுக கொண்டாட்டத்தில் உள்ளது. ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம் அடைந்துள்ளனர். இன்னும் முழுமையாக ரேஷன் பொருட்களை மக்களுக்கு வழங்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ரேஷன் பொருட்களை விநியோகிக்காமல் இருப்பதா?. பிப்ரவரி மாதமே 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு, 6 கோடி லிட்டர் பாமாயில் வாங்க கோரப்பட்ட டெண்டர் என்னவானது?. தரமற்ற துவரம் பருப்பை அனுப்பிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

இ.பி.எஸ்., கண்டனம்

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது விநியோகத்தில் வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்து, நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழகத்தில், உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அவலநிலைக்கு சீர்கெடச் செய்த இந்த திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.

ஏழை எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சீராக விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us