sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் 50,000 பக்க குற்றப்பத்திரிகை; சகோதரருடன் செந்தில் பாலாஜி ஆஜர்

/

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் 50,000 பக்க குற்றப்பத்திரிகை; சகோதரருடன் செந்தில் பாலாஜி ஆஜர்

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் 50,000 பக்க குற்றப்பத்திரிகை; சகோதரருடன் செந்தில் பாலாஜி ஆஜர்

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் 50,000 பக்க குற்றப்பத்திரிகை; சகோதரருடன் செந்தில் பாலாஜி ஆஜர்

11


ADDED : ஜூன் 09, 2025 09:33 PM

Google News

11

ADDED : ஜூன் 09, 2025 09:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரருடன் இன்று கோர்ட்டில் ஆஜரானார். இதில் 12 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. கூடுதல் குற்றப்பத்திரிகையும் கடந்த ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கில் செந்தில் பாலாஜி உள்பட மொத்தம் 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இவர்களுக்கு 50,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஆவணங்களை காகித வடிவில் வழங்க அமலாக்கத்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

இந் நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி. சகோதரர் அசோக் குமார் உள்பட அனைவரும் நேரில் ஆஜராகினர். செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டிருந்த நிலையில், எஞ்சிய 12 பேருக்கு அதன் நகல்கள் இன்று (ஜூன் 9) வழங்கப்பட்டன.

50,000 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகை உள்ளதால் அதை படிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜூன் 23ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us