ADDED : செப் 20, 2025 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேபாளத்தில், தொடர்ந்து ஊழல் ஆட்சி நடந்தது. அங்கு, ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தினர். தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்; தேர்தல் வாயிலாக ஏற்படும். ஊழல் தி.மு.க., ஆட்சி இருக்க கூடாது.
என்னிடம் ஆட்சியை தந்தால், அடுத்த 6 நாளில் மாற்றம் தருவேன். பஞ்சாபில்தான் போதை பொருள் பழக்கம் அதிகமாக இருந்தது. தற்போது தமிழகத்தில் அதிகமாகி உள்ளது.
காவிரியின் மிகப்பெரிய கிளை ஆறு கொள்ளிடம். கடந்த 2022-ல், அமைத்த 26 மணல் குவாரிகளில் 11 மணல் குவாரிகளை கொள்ளிடத்தில் தி.மு.க., அரசு கொண்டு வந்தது. எங்களுக்கு மணல் குவாரி வேண்டாம்.
தடுப்பணை வேண்டும் . ஆதனுார் -- குமாரமங்கலம் தடுப்பணை 15 ஆண்டு களாகியும் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை.
- அன்புமணி,
தலைவர், பா.ம.க.,

