தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்!
UPDATED : மே 19, 2025 03:48 PM
ADDED : மே 19, 2025 02:42 PM

சென்னை: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் மற்றும் வடக்கு கேரள பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கனமழை எச்சரிக்கை!
* கோவை,
* ஈரோடு,
* திருப்பூர்,
* தேனி,
* திண்டுக்கல்,
* கிருஷ்ணகிரி,
* தருமபுரி,
* சேலம்,
* நாமக்கல்,
* திருப்பத்தூர்,
* வேலூர்,
* சிவகங்கை,
* ராணிப்பேட்டை,
* மதுரை,
* ராமநாதபுரம்,
* விருதுநகர்,
* தென்காசி
ஆகிய 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.