sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் இன்று தொடங்கியது வடகிழக்கு பருவமழை!

/

தமிழகத்தில் இன்று தொடங்கியது வடகிழக்கு பருவமழை!

தமிழகத்தில் இன்று தொடங்கியது வடகிழக்கு பருவமழை!

தமிழகத்தில் இன்று தொடங்கியது வடகிழக்கு பருவமழை!


UPDATED : அக் 16, 2025 12:42 PM

ADDED : அக் 15, 2025 11:37 PM

Google News

UPDATED : அக் 16, 2025 12:42 PM ADDED : அக் 15, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை கடந்த மே 24ல் துவங்கியது. இம்மழை இயல்பானதாக இருந்தது. இன்று தென்மேற்கு பருவ மழை விலகி, வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழக கடலோரம் மற்றும் குமரிக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென்மேற்கு பருவ மழை, இந்திய பகுதிகளில் இருந்து இன்று விலகியது. தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தென் மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பெய்யும். வட மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us