sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன்: ஓ.பி.எஸ்.,

/

தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன்: ஓ.பி.எஸ்.,

தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன்: ஓ.பி.எஸ்.,

தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன்: ஓ.பி.எஸ்.,


ADDED : செப் 02, 2025 01:48 AM

Google News

ADDED : செப் 02, 2025 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி: ''தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டேன். இருப்பினும் அடுத்து எது வேண்டுமானாலும் நடக்கலாம்,'' என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தென்காசியில் சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் பிறந்த தின விழாவில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:

வரும் காலத்தில் எத்தகைய கூட்டணி வரும் என்பதை, என் தொண்டர்கள் தீர்மானிப்பர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன். தமிழக அரசியல் வரலாற்றில், எல்லா கட்சிகளும், எல்லாரிடமும் கூட்டணி வைத்துள்ளனர்; எதிர்த்தும் நின்றுள்ளனர்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி முதுகில் குத்தி விட்டார் என தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா கூறியிருக்கிறார். அது சரியானது.

அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்ற சசிகலாவின் அறிக்கையை வரவேற்கிறேன்.

அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். அதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகள் சென்றுள்ளார். அவரது ப யணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

நடிகர் விஜய் கட்சி யுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்பதே பதில்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us