sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அஜித், நயன்தாரா வந்தால் இன்னும் பல மடங்கு கூட்டம் வரும்: விஜய்க்கு கூடிய கூட்டம் பற்றி சீமான் பேட்டி

/

அஜித், நயன்தாரா வந்தால் இன்னும் பல மடங்கு கூட்டம் வரும்: விஜய்க்கு கூடிய கூட்டம் பற்றி சீமான் பேட்டி

அஜித், நயன்தாரா வந்தால் இன்னும் பல மடங்கு கூட்டம் வரும்: விஜய்க்கு கூடிய கூட்டம் பற்றி சீமான் பேட்டி

அஜித், நயன்தாரா வந்தால் இன்னும் பல மடங்கு கூட்டம் வரும்: விஜய்க்கு கூடிய கூட்டம் பற்றி சீமான் பேட்டி


ADDED : செப் 14, 2025 12:08 PM

Google News

ADDED : செப் 14, 2025 12:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ''ரஜினி, அஜித், நயன்தாரா வந்தால் இன்னும் பல மடங்கு கூட்டம் வரும்'' என திருச்சியில் நடிகர் விஜய்க்கு கூடிய கூட்டம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் சீமான் கூறியதாவது: இளையராஜாவை இசை இறைவனாக பார்க்கிறோம். சச்சினுக்கு விருது தரும் போது, இளைய ராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுத்தால் எங்களுக்கு பெருமை.

ரஜினி, அஜித், நயன்தாரா வந்தால் விஜய்க்கு வரும் கூட்டத்தை விட பல மடங்கு அதிகமான கூட்டம் வரும். இயற்கை வளங்கள் குறித்து நான் போதிக்கும் போது புரியாது. பாதிக்கும் போது புரியும். இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் வந்த நிலை நமக்கு வராது என்று யாராவது உறுதி தர முடியுமா?

வேடிக்கை

பக்கத்து வீட்டு கூரை தான் எரிகிறது என்று படுக்க போனால் விழுகிறது உங்கள் சாம்பல் ஆக தான் இருக்கும். தன் வீட்டு கூரை எரியாத வரை நீங்கள் தண்ணீர் எடுத்து வர தயாராக இல்லை. பக்கத்து வீட்டு கூரை தான் எரிகிறது என்று ஆனந்தத்தில் தூங்க போகிறீர்கள். பார்க்க நீங்கள் இருக்க மாட்டீர்கள். உங்கள் சாம்பல் தான் இருக்கும். எச்சரிக்கையாக இருங்கள். இப்பொழுது நான் பேசுகிறது வேடிக்கையாக தான் இருக்கும்.

சுவாசிக்க காற்று

நீங்கள் மலையை வெட்டி, கல்லாக்கி உங்கள் பிள்ளைக்கு பெரிய வீட்டை கட்டி வைத்து போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் இந்த நாட்டை எனது பிள்ளைகளுக்கு வாழ்வதற்கு வைத்துவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் காசு சேர்த்து வைத்துவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் சுவாசிக்க நல்ல காற்றை சேர்த்து வைத்து விட்டு சாக வேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.






      Dinamalar
      Follow us