கழுகுகள் எண்ணிக்கை அதிகரிப்பு வனத்துறை கணக்கெடுப்பில் தகவல்
கழுகுகள் எண்ணிக்கை அதிகரிப்பு வனத்துறை கணக்கெடுப்பில் தகவல்
ADDED : ஜன 26, 2024 01:43 AM

சென்னை:தமிழகத்தில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு வாயிலாக, கழுகுகள் எண்ணிக்கை, 320 ஆக அதிகரித்துள்ளது.
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள்; கர்நாடக மாநிலத்தில் பந்திப்பூர், நாகர் ேஹால் புலிகள் காப்பகங்கள்; கேரளாவில் வயநாடு வன உயிரின காப்பகம் ஆகிய இடங்களில், 2023 பிப்., 25, 26 தேதிகளில் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மொத்தம் 246 கழுகுகள் இருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து, 2023, டிச., 30, 31 ஆகிய தேதிகளில், தமிழகம், கேரளம், கர்நாடக வனப் பகுதிகளில் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், ஐந்து வகைகளில் மொத்தம், 320 கழுகுகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதில் வெண்ணிற கழுகுகள், 217; நீண்ட பில்ட் கழுகு, 47; சிவப்பு தலை கழுகு, 50; எகிப்தியன் கழுகு, 4; இமாலய கழுகு, 2 என மொத்தம், 320 கழுகுகள் இருப்பது கணக்கெடுப்பு வாயிலாக உறுதியாகிறது.
கால்நடை மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும், 'டிக்ளோ பெனாக்' மருந்து, கழுகுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், இதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
தடையை மீறி விற்றவர்கள் மீது, 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், கழுகுகளின் தேவை கருதி, காட்டில் இறக்கும் விலங்குகளின் உடல்களை புதைக்காமல், வெட்ட வெளியில் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

