ADDED : ஜன 17, 2024 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கடலோர பகுதிகளில், குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு:
தமிழகத்தில் எந்த பகுதியிலும், நேற்று மழை இல்லை. மாநில அளவில் ஈரோட்டில் அதிகபட்சமாக, 34 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
வரும் நாட்களில், மாநிலம் முழுதும், அதிகாலை வேளைகளில் லேசான பனி மூட்டம் காணப்படும்.
நீலகிரி மாவட்டத்தின் சில இடங்களில், இரவில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டமாகவும், காலையில் பனிமூட்டமாகவும் காணப்படும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

