எம்.எல்.ஏ., கருணாநிதி மகன் ஆன்ட்ரோ, மருமகள் மார்லினா புழல் சிறையில் அடைப்பு
எம்.எல்.ஏ., கருணாநிதி மகன் ஆன்ட்ரோ, மருமகள் மார்லினா புழல் சிறையில் அடைப்பு
UPDATED : ஜன 28, 2024 02:00 PM
ADDED : ஜன 26, 2024 09:50 PM

சென்னை:இளம் பெண்ணின் உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்த, தி.மு.க., - எம்.எல்,ஏ., கருணாநிதியின் மகன், மருமகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த, 18 வயது பெண், சென்னை திருவான்மியூரில் உள்ள, தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ, 35; மருமகள் மார்லினா, 32, ஆகியோர் வீட்டில் வேலை செய்து வந்தார். இருவரும் இளம் பெண்ணின் உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை நீலாங்கரை மகளிர் காவல் நிலைய போலீசார், எஸ்.சி., -- எஸ்.டி., வன்கொடுமை உட்பட, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, ஆந்திராவில் பதுங்கி இருந்த, ஆன்ட்ரோ, மார்லினா ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, எழும்பூர் குடியிருப்பில் நீதிபதி முன் நேற்று ஆஜர்படுத்தி, பிப்., 9 வரை, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

