ADDED : ஜூன் 05, 2025 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா பல்கலை பாலியல் விவகாரத்தில் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் அதிகம் உள்ளன. தீர்ப்பு வெளியான பின்னரும், பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களிடம் உள்ளன. இந்த பிரச்னையில், தி.மு.க., அனுதாபியான ஞானசேகரன், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில், வழக்கு தொடர்பாக ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை தீர்ப்பது முதல்வரின் கடமை.
தமிழை உயர்த்தி பேசினால் நாங்கள் வரவேற்போம். ஆனால், ஒரு மொழியை சிறுமைப்படுத்தி, இன்னொரு மொழியை உயர்த்தி பேசினால் தேவையில்லாத சர்ச்சைகள் உருவாகத்தான் செய்யும். அதைத்தான் நடிகர் கமல் செய்துள்ளார்.
- நாகேந்திரன்,
தலைவர், தமிழக பா.ஜ.,