sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாணவர்களை ஏற்றி சென்ற வேன் மோதி ஒருவர் பலி

/

மாணவர்களை ஏற்றி சென்ற வேன் மோதி ஒருவர் பலி

மாணவர்களை ஏற்றி சென்ற வேன் மோதி ஒருவர் பலி

மாணவர்களை ஏற்றி சென்ற வேன் மோதி ஒருவர் பலி


ADDED : ஜூலை 03, 2025 12:18 PM

Google News

ADDED : ஜூலை 03, 2025 12:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: திருக்கடையூர் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன், பைக் மீது மோதிய விபத்தில் பெயின்டர் பலியானார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா சர்ச் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் ராஜா, 45, பெயின்டர். நேற்று காலை இவரும், அதே தெருவை சேர்ந்த மாசிலாமணி மகன் காபிரியல், 50, என்பவரும் பைக்கில் மயிலாடுதுறை நோக்கி சென்றனர்.

ஆனந்தமங்கலம் மெயின் ரோட்டில், எதிரே திருக்கடையூர் பகுதியில் இருந்து பொறையாரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் தாறுமாறாக ஓடி, பைக் மீது மோதியது.

தொடர்ந்து, சாலையோர மரத்தில் மோதி நின்றது. வேனில் பயணித்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த காபிரியல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பொறையார் போலீசார், தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us