sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது

/

நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது

நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது

நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது

4


ADDED : மார் 21, 2025 12:33 PM

Google News

4

ADDED : மார் 21, 2025 12:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்: கடலூர் அருகே விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் ஊராட்சிக்குட்பட்ட மலையடி குப்பம், பெத்தான் குப்பம், கொடுக்கம்பாளையம் உள்ளிட்ட 4 கிராமங்களில் 160 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களை கையகப்படுத்தி, தனியார் தோல் தொழிற்சாலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சண்முகம் உள்ளிட்ட கட்சியினர், விவசாய அமைப்பினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.






      Dinamalar
      Follow us