sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாக்.,கிற்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி: நயினார்

/

பாக்.,கிற்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி: நயினார்

பாக்.,கிற்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி: நயினார்

பாக்.,கிற்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி: நயினார்


ADDED : மே 18, 2025 01:11 AM

Google News

ADDED : மே 18, 2025 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' என, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று மாலை, 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றிக்கு பாடுபட்ட முப்படை ராணுவ வீரர்கள் மற்றும் பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில், கொட்டும் மழையில் நடந்த மூவர்ணக்கொடி பேரணியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: ஹிந்து மத கலாசாரப்படி, வீட்டில் ஒருவர் இறந்து விட்டால், 16வது நாள் காரியம் செய்வோம். பஹல்காம் சம்பவம் நடந்து 16 நாட்கள் கழித்து பாகிஸ்தானுக்கு காரியம் செய்த மாவீரன் தான் பிரதமர் மோடி. மேலும், 90 நிமிடங்களில், 9 இடங்களை வெடிகுண்டு வைத்து தகர்த்தது நம் ராணுவம். நிமிர்ந்தது நம் கவுரவம். நம், 'பிரமோஸ்' ஏவுகணையை வாங்க, 16 நாடுகள் ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டுள்ளன. அப்படியானால் நம் ராணுவம், ராணுவ தளவாடங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை பாருங்கள். அதைவிட சக்தி வாய்ந்தவர் பிரதமர் மோடி.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.

ஒன்றுபட்ட இந்தியர்கள்

பஹல்காம் தாக்குதல், ஒவ்வொரு இந்தியரின் நெஞ்சத்தையும் உலுக்கியது. அப்பாவி பொதுமக்கள், 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மதத்தின் அடிப்படையில், அந்த படுகொலை நடந்தது. இந்தியாவில் ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே, ஒரு விஷமத்தனமான பிரச்னையை உருவாக்கி, நாட்டிற்குள் பிரச்னையை உருவாக்க வேண்டும் என்பது பயங்கரவாதிகள் நோக்கம். அதை முறியடித்து, இந்தியர்களாக ஒன்றுபட்டுள்ளோம். பிரதமர் மோடி முப்படைக்கும் முழு சுதந்திரத்தை அளித்தார். பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவின் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. -அண்ணாமலைமுன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,








      Dinamalar
      Follow us