தன்வந்திரி பெருமாள் கோவில் திருப்பணிக்கு உதவ வேண்டுகோள்
தன்வந்திரி பெருமாள் கோவில் திருப்பணிக்கு உதவ வேண்டுகோள்
ADDED : ஜூன் 17, 2025 11:00 PM
சென்னை:புதுக்கோட்டை மாவட்டம், கூழிபிறை கிராமத்தில் உருவாகி வரும் தன்வந்திரிப் பெருமாள் கோவில் திருப்பணிகளுக்கு உதவுமாறு, தன்வந்திரிப் பெருமாள் அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கூழிபிறை கிராமத்தில தன்வந்திரிப் பெருமாள் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 300 சதுர அடி பரப்பில், 12 அடி உயரத்தில், கருங்கற்களால் கருவறை, திருவறை எழுப்பப்பட்டுள்ளது. திருவறை நிலை வாசலில், கற்களால் வடிக்கப்பட்ட கஜலட்சுமி தாயார் அருள்புரிகிறார்.
கருவறை மீது மூன்று நிலை விமானம் 42 அடி உயரத்திற்கு கட்டப்பட்டு, 48 சுதை வேலைகள் நடந்து வருகின்றன. இந்த கோபுரம், வண்ணப் பூச்சில் ஒற்றை கலச விமானத்துடன் ஜொலிக்க உள்ளது.
தன்வந்திரிப் பெருமாள் திருமேனி தாமரை பீடத்துடன், 84 அங்குல உயரத்தில் உருவாகி வருகிறார். 600 சதுர அடி பரப்பில் மகா மண்டபப் பணிகள் நடந்து வருகின்றன.
இக்கோவில் வளாகத்தில் நுாலகம் அமையவுள்ளது. ஒற்றைத் தேக்கில் நெடிதுயர்ந்த கொடி மரமும், கோவில் கதவும் உருவாகி வருகின்றன.
கருடாழ்வாருக்கும், ஆஞ்சநேயருக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட உள்ளன. மடப்பள்ளி, ஓய்வறைகள், மூலிகைத் தோட்டம் அமையவுள்ளன.
இந்த பணிகளுக்காக பக்தர்களிடம் இருந்து நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. 25,000 ரூபாய் மற்றும் அதற்கு மேல் நன்கொடை அளிப்பவர்களின் பெயர்கள் கல்வெட்டில் இடம்பெறும்.
திருப்பணியில் பங்கு பெற விரும்புபவர்கள், 'தன்வந்திரிப் பெருமாள் அறக்கட்டளை, இந்தியன் வங்கி, கூழிபிறை -622402, SB 7492523213, IFSC IDIB000K170' என்ற வங்கிக் கணக்கில் நன்கொடை அனுப்பலாம்.
மேலும் விபரங்களுக்கு, சீத்தலைச்சாத்தன் - 98424 90447, வாட்ஸாப் 93858 86315; ராமசாமி - 93439 36609, லட்சுமணன் - 99444 36815 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

