sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.2,500 தர ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை

/

ரூ.2,500 தர ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை

ரூ.2,500 தர ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை

ரூ.2,500 தர ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை


ADDED : ஜன 17, 2024 05:47 AM

Google News

ADDED : ஜன 17, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்ததற்காக ஏற்பட்ட கூடுதல் பணிக்காக தினமும் தலா, 500 ரூபாய் வீதம், ஐந்து நாட்களுக்கு, 2,500 ரூபாய் வழங்குமாறு ரேஷன் கடை ஊழியர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் ஜி.ராஜேந்திரன் விடுத்த அறிக்கை:

பொங்கல் பரிசு வாங்க எந்த தேதி, நேரத்திற்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கனை, கார்டுதாரர் வீடுகளில் வழங்கும் பணியில் இம்மாதம், 7ம் தேதி முதல் ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பின், ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு இடையே கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினர்.

கரும்பு எடுத்து வர வாகன வாடகை போன்றவற்றை, ஊழியர்கள் தம் சொந்த செலவில் மேற்கொண்டனர். எனவே, ரேஷன் ஊழியர்களுக்கு தினமும் தலா, 500 ரூபாய் என, ஐந்து நாட்களுக்கு 2,500 ரூபாய், தமிழக அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us