sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை: நடிகர் விஜய் ஆசை

/

தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை: நடிகர் விஜய் ஆசை

தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை: நடிகர் விஜய் ஆசை

தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை: நடிகர் விஜய் ஆசை

56


UPDATED : ஜூன் 28, 2024 11:09 AM

ADDED : ஜூன் 28, 2024 10:42 AM

Google News

UPDATED : ஜூன் 28, 2024 11:09 AM ADDED : ஜூன் 28, 2024 10:42 AM

56


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ‛‛தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கிறது. நல்லா படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்; தலைவர்களாக வர வேண்டும்'' என மாணவர்கள் மத்தியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய் பேசினார்.

தமிழகத்தில் உள்ள தொகுதி வாரியாக 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா, சென்னையில் இன்று (ஜூன் 28) நடைபெற்றது. இந்தாண்டு இந்த விழாவை இன்று மற்றும் ஜூலை 3 என இரண்டு கட்டங்களாக நடக்கிறது.

விழா நடைபெறும் மண்டபத்திற்கு வந்த நடிகர் விஜய், நாங்குநேரியில் சாதிய தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னதுரையின் அருகில் அமர்ந்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. விழாவில் மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது:

எல்லா துறைகளும் நல்ல துறையே; நமக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுத்து 100 சதவீதம் உழைத்தால் வெற்றிதான். தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கிறது. தலைவர்கள் என்பது அரசியலில் மட்டும் சொல்லவில்லை; மாணவர்களான நீங்கள் செல்லும் துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை.

நல்லா படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்; தலைவர்களாக வரவேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இது ஒரு பெற்றோராகவும், அரசியல் இயக்க தலைவராகவும் எனக்கு அச்சமாக இருக்கிறது. ஆளும் அரசு தவற விட்டுட்டாங்க அப்படின்னு சொல்ல நான் இங்க வரல; அதற்கான மேடையும் இது இல்ல. நண்பர்கள் யாராவது தவறான பாதையில் ஈடுபட்டால் அவர்களை திருத்த முயலுங்கள். தவறான பாதையில் யாரும் ஈடுபடாதீர்கள்; அடையாளத்தை ஒருபோதும் இழக்காதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us