sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விஜய் கட்சிக்கு கும்பிடு; விலகிக்கொண்டார் பிரசாந்த் கிஷோர்!

/

விஜய் கட்சிக்கு கும்பிடு; விலகிக்கொண்டார் பிரசாந்த் கிஷோர்!

விஜய் கட்சிக்கு கும்பிடு; விலகிக்கொண்டார் பிரசாந்த் கிஷோர்!

விஜய் கட்சிக்கு கும்பிடு; விலகிக்கொண்டார் பிரசாந்த் கிஷோர்!


ADDED : ஜூலை 05, 2025 01:12 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 01:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக்கொண்டுள்ளார். 'மீண்டும் வரலாமா, வேண்டமா என்பதை நவம்பர் மாதத்துக்கு பிறகே முடிவு செய்வேன்' என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், அடுத்த தேர்தலில் போட்டியிடுகிறார். தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது என்று நேற்று நடந்த செயற்குழுவில் வெளிப்படையாக அறிவித்துள்ள விஜய், கூட்டணி ஆட்சிக்கு தயாராக இருப்பதாகவும் ஏற்கனவே கூறி இருக்கிறார்.

சென்னையில் பிப்ரவரியில் நடந்த கட்சியின் விஜய் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், தேர்தல் பிரசார உத்திகளை வகுக்கும் நிபுணரான பிரசாந்த் கிஷார் பங்கேற்றார்.

விஜயை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து பேசிய அவர், 'விஜய் தமிழகத்தின் புதிய நம்பிக்கை' என்றும் கூறினார்.

'தமிழகத்தின் மிகவும் பிரபலமான பீகாரியாக தோனி இருக்கிறார். அடுத்தாண்டு விஜய் கட்சி ஆட்சியை பிடிக்கும்போது, நான் தான் பிரபலமான பீகாரியாக இருப்பேன்' என்றும் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
அதன்படி பிரசாந்த் கிஷோரின் சிம்ப்பிள் சென்ஸ் அனல்ட்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் பணியாளர்கள், த.வெ.க., உடன் இணைந்து தேர்தல் உத்திகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

எல்லாம் சில மாதங்கள் சரியாக நடந்த நிலையில், இப்போது தமிழக தேர்தலில் பிரசாந்த் கிஷோருக்கு ஆர்வம் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. பீகார் மாநில தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிடுவதால், அவரது கவனம் முழுவதும் அங்கு தான் இருக்கிறது. அது மட்டுமின்றி, தமிழகத்தில் விஜய் எடுத்த கூட்டணி தொடர்பான நிலைப்பாடுகளில், பிரசாந்த் கிஷோர் தரப்பினருக்கு உடன்பாடு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, விஜய் கட்சிக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பில் இருந்து பிரசாந்த் கிஷோர் வெளியேறி விட்டார். அவரது சார்பில் தமிழகத்தில் விஜய் கட்சிக்காக பணியாற்றிய 30 பேரும், சமீபத்தில் விலகிக்கொண்டு விட்டனர். அவர்களில் ஒரு சிலர், நேரடியாக ஆதவ் அர்ஜூனாவின் 'வாய்ஸ் ஆப் காமன்ஸ்' நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர்.

'நான் பீகார் தேர்தல் பணியில் மும்முரமாக இருக்கிறேன். விஜய்க்கு ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபடலாமா, வேண்டாமா என்று நவம்பர் மாதத்துக்கு பிறகே முடிவு செய்வேன்' என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.







      Dinamalar
      Follow us