sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குடவோலை தேர்தலை மையப்படுத்திய தமிழக ஊர்தி

/

குடவோலை தேர்தலை மையப்படுத்திய தமிழக ஊர்தி

குடவோலை தேர்தலை மையப்படுத்திய தமிழக ஊர்தி

குடவோலை தேர்தலை மையப்படுத்திய தமிழக ஊர்தி


ADDED : ஜன 26, 2024 10:43 PM

Google News

ADDED : ஜன 26, 2024 10:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:டில்லியில் நேற்று நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில், 'பழந்தமிழகத்தின் குடவோலை முறை - மக்களாட்சியின் தாய்' என்ற கருப்பொருள் அடிப்படையில், 10ம் நுாற்றாண்டு சோழர் கால குடவோலை முறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெற்றது.

வாகனத்தின் முகப்பு பகுதியில் இடம் பெற்ற சிற்பங்கள், குடவோலை முறையில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவதை சித்தரித்தன.

அனைத்து மக்களும் தங்கள் ஓட்டு சீட்டை குடத்தில் போட வரிசையில் நிற்றல், ஒரு சிறுவன் குடத்திலிருந்து ஓலையை எடுத்ததும், தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெயரை உரக்க அறிவித்தல், அவருக்கு ஊர் பெரியவர்கள் மாலை அணிவித்து வாழ்த்துதல், கிராம மக்கள் ஆலமரத்தடியில் அமர்ந்து, கிராம மேம்பாட்டு திட்டங்களை தீட்டுதல் போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன.

குடவோலை குறித்து குறிப்பிடும், மருதன் இளநாகனார் எழுதிய, 'கயிறுபிணிக் குழிசி ஓலை' என்ற சங்க இலக்கிய அகநானுாற்றுப் பாடல் வரிசைகளுக்கு, இசைகோர்ப்பு செய்யப்பட்டு, மகளிர் நடனமாடியதும், பார்வையாளர்களை கவர்ந்தது.






      Dinamalar
      Follow us