sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிணற்றில் விழுந்த சிறுமி பலி விக்கிரவாண்டி அருகே சோகம்

/

கிணற்றில் விழுந்த சிறுமி பலி விக்கிரவாண்டி அருகே சோகம்

கிணற்றில் விழுந்த சிறுமி பலி விக்கிரவாண்டி அருகே சோகம்

கிணற்றில் விழுந்த சிறுமி பலி விக்கிரவாண்டி அருகே சோகம்


ADDED : செப் 15, 2025 02:52 AM

Google News

ADDED : செப் 15, 2025 02:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த திருநந்திபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 42; கூலித் தொழிலாளி. இவரது மகள் இந்துஜா, 9; அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் தனது சகோதரிகள் கிவினிஸ்ரீ, 16; ஜெயஸ்ரீ, 13; ஆகியோருடன் அதே பகுதி வயல் ெவளியில் உள்ள பம்பு செட்டில் குளிக்கச் சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக இந்துஜா கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

உடன் சென்ற சகோதரிகள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அக்கம், பக்கத்தினர் திரண்டு கிணற்றில் குதித்து தேடியும் கிடைக்கவில்லை.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 5 மோட்டார் உதவியுடன் கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றி, ஐந்தரை மணிநேரத்திற்குப் பின் 8:30 மணியளவில் சிறுமி இந்துஜா உடலை மீட்டனர்.

இதுகுறித்து பெரியதச்சூர் சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us