sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஸ்லீப்பர்' பெட்டி குறைப்பு ரத்து ரயில் பயணியர் வரவேற்பு

/

'ஸ்லீப்பர்' பெட்டி குறைப்பு ரத்து ரயில் பயணியர் வரவேற்பு

'ஸ்லீப்பர்' பெட்டி குறைப்பு ரத்து ரயில் பயணியர் வரவேற்பு

'ஸ்லீப்பர்' பெட்டி குறைப்பு ரத்து ரயில் பயணியர் வரவேற்பு


ADDED : ஜூன் 05, 2025 05:01 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: விரைவு ரயில்களில் குறைந்த கட்டணத்தில், 'ஏசி' பெட்டியில் பயணிக்கும் வகையில், மூன்றாம் வகுப்பு 'ஏசி' பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன. இந்த வகை பெட்டிகள், தற்போது ரயில்களில் கூடுதலாக இணைக்கப்படுகின்றன.

அந்த வகையில், சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் நெல்லை விரைவு ரயில், சென்னை - செங்கோட்டை பொதிகை ரயில் உட்பட எட்டு ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகள் நீக்கப்பட்டு, அவற்றுக்கு மாற்றாக 'ஏசி' பெட்டிகள், வரும் ஆக., முதல் இணைத்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்தது. 'இதனால், சாதாரண பயணியர் பாதிக்கப்படுவர்' என, பயணியர் வலியுறுத்தினர்.

பல்வேறு சங்கங்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அதைத் தொடர்ந்து, 'நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்களில், ஆகஸ்ட் முதல் தலா ஒரு ஸ்லீப்பர் பெட்டிகள் குறைக்கப்படும்' என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக, சுற்றறிக்கை வெளியாகி உள்ளது. இதற்கு பயணியர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us