sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீஸ் ஸ்டேஷன் விவகாரத்தில் உதயகுமார் கைது: நயினார் நகேந்திரன் கண்டனம்

/

போலீஸ் ஸ்டேஷன் விவகாரத்தில் உதயகுமார் கைது: நயினார் நகேந்திரன் கண்டனம்

போலீஸ் ஸ்டேஷன் விவகாரத்தில் உதயகுமார் கைது: நயினார் நகேந்திரன் கண்டனம்

போலீஸ் ஸ்டேஷன் விவகாரத்தில் உதயகுமார் கைது: நயினார் நகேந்திரன் கண்டனம்

1


ADDED : ஜூன் 14, 2025 03:55 PM

Google News

1

ADDED : ஜூன் 14, 2025 03:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: போலீஸ் ஸ்டேஷன் சூறையாடப்பட்ட விவகாரத்தில், அங்கு சென்று பார்வையிடச் சென்ற தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் சூறையாடப்பட்ட காவல்நிலையத்தைப் பார்வையிடச் சென்ற தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரான உதயகுமார் தமிழக காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

காவல் நிலையத்திற்குள் துணிச்சலாக நுழைந்து அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய குற்றவாளிகளைத் தடுக்கத் தவறிய காவல்துறை, அதைப் பார்வையிட செல்லும் அரசியல் தலைவர்களைக் கைது செய்வது என்பது அராஜகம் மட்டுமன்றி கடும் கண்டனத்திற்குரியது.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us