sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குறுவை அறுவடை துவக்கம் முறை வைத்து நீர் திறப்பு

/

குறுவை அறுவடை துவக்கம் முறை வைத்து நீர் திறப்பு

குறுவை அறுவடை துவக்கம் முறை வைத்து நீர் திறப்பு

குறுவை அறுவடை துவக்கம் முறை வைத்து நீர் திறப்பு


ADDED : செப் 16, 2025 06:43 AM

Google News

ADDED : செப் 16, 2025 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை துவங்கியுள்ளதால், முறை வைத்து பாசனத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு, 6.09 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. இதற்காக, சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து, ஜூன் 12 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இது, தஞ்சாவூர் கல்லணை வழியாக டெல்டா பாசனத்திற்கு காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகள் வழியாக திறந்து விடப்படுகிறது. குறுவை பருவ நெல் அறுவடை துவங்கியுள்ளது. வரும் நாட்களில் இது தீவிரம் அடையும்.

எ னவே, பிரதான ஆறுகள் மட்டுமின்றி சிற்றாறுகள், கால்வாய், வாய்க்கால்களில் நீர் சென்றால், அறுவடை பாதிக்கும். இதை கருத்தில் வைத்து, நீரை முறை வைத்து திறக்கும் பணியில், நீர்வளத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டூர் அணை ஏற்கனவே முழுக் கொள்ளளவை எட்டிள்ளது. வினாடிக்கு, 18,564 கன அடி நீர்வந்து கொண்டு இருக்கிறது. அதில் இருந்து வினாடிக்கு, 17,637 கன அடி ஆற்றிலும், 800 கனஅடி நீர் கால்வாயிலும் திறக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us