sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக் கூடாது? அணுமின் நிலையங்களில் தாக்குதலுக்கு பின் டிரம்ப் சூசகம்!

/

ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக் கூடாது? அணுமின் நிலையங்களில் தாக்குதலுக்கு பின் டிரம்ப் சூசகம்!

ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக் கூடாது? அணுமின் நிலையங்களில் தாக்குதலுக்கு பின் டிரம்ப் சூசகம்!

ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக் கூடாது? அணுமின் நிலையங்களில் தாக்குதலுக்கு பின் டிரம்ப் சூசகம்!

7


ADDED : ஜூன் 23, 2025 07:39 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 07:39 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ஈரானின் 3 அணுமின் நிலையங்களில், அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், அங்கு (ஈரான்) ஏன் ஆட்சி மாற்றம் வர கூடாது என அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களாக நடந்து வரும் சண்டை முக்கிய கட்டத்தை எட்டியது. அமெரிக்கா நேற்று நேரடியாக தாக்குதல் நடத்தியும், மோதலில் இருந்து பின் வாங்காத ஈரான், சில மணி நேரங்களில் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து சக்திவாய்ந்த, 'கொரம்ஷார் - 4' ஏவுகணையை ஈரான் வீசியது.

இந்நிலையில், ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வர கூடாது என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து டிரம்ப், சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கிரேட் பி-2 விமானிகள் மிசோரியில் பாதுகாப்பாக தரையிறங்கினர். சிறப்பாகச் செய்த பணிக்கு நன்றி. ஈரானில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதம் சிறப்புமிக்கது.

தாக்குதல்கள் கடினமாகவும், துல்லியமாகவும் இருந்தன. எங்கள் ராணுவத்தின் திறமை நிரூபிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானது அல்ல. ஆனால் தற்போதைய ஈரான் ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us