ADDED : ஜூன் 02, 2025 02:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளை கடந்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள ரஷ்யாவின் பிரயான்ஸ்க் பகுதியில் பாலம் ஒன்று வெடித்து சிதறி, கீழே சென்று கொண்டிருந்த பயணியர் ரயில் மீது விழுந்தது.
இதில், ஏழு பேர் உயிரிழந்தனர்; 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு சில நிமிடங்களில், உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள குர்ஸ்க் பகுதியில் ரயில் பாலம் தகர்க்கப்பட்டதில், சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது.