sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வரிவிதிப்பால் போருக்கு தீர்வு காண முடியாது: டிரம்புக்கு சீனா பதில்

/

வரிவிதிப்பால் போருக்கு தீர்வு காண முடியாது: டிரம்புக்கு சீனா பதில்

வரிவிதிப்பால் போருக்கு தீர்வு காண முடியாது: டிரம்புக்கு சீனா பதில்

வரிவிதிப்பால் போருக்கு தீர்வு காண முடியாது: டிரம்புக்கு சீனா பதில்


ADDED : செப் 14, 2025 10:25 AM

Google News

ADDED : செப் 14, 2025 10:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜிங்: ''வரி விதிப்பதாலோ, பொருளாதார தடை விதிப்பதாலோ போருக்கு தீர்வு காண முடியாது. அவை பிரச்னையை மேலும் சிக்கலாக்கும்,'' என அதிபர் டிரம்புக்கு சீனா பதில் அளித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், போர் முடியும் வரை சீனா மீது 50 முதல் 100 சதவீதம் வரிகள் விதிப்பது உள்ளிட்ட ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் விரிவான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'நேட்டோ' நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதில் அளித்து வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கூறியதாவது:

போர் பிரச்னைகளை தீர்க்க முடியாது. வரி விதிப்பதும் பொருளாதாரத் தடை விதிப்பதும் நிலைமையை மேலும் சிக்கலாக்கும். போர் பிரச்னையை தீர்ப்பதற்கான அமைதி பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதற்கு சீனா உறுதிபூண்டுள்ளது. நாங்கள் போர்களில் பங்கேற்கவோ, திட்டமிடவோ இல்லை.

அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். தற்போதைய காலக்கட்டத்தில் குழப்பமான சூழல் நிலவுகிறது. சீனாவும், ஐரோப்பாவும் போட்டியாளர்களாக இருக்காமல், நண்பர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு வாங் யி தெரிவித்து உள்ளார்.






      Dinamalar
      Follow us