sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது: வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு புடின் ஆதரவு

/

காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது: வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு புடின் ஆதரவு

காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது: வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு புடின் ஆதரவு

காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது: வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு புடின் ஆதரவு


ADDED : செப் 03, 2025 10:13 PM

Google News

ADDED : செப் 03, 2025 10:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய மீது அமெரிக்க வரி விதித்துள்ள சூழ்நிலையில், சர்வதேச அரசியல் அல்லது பாதுகாப்பு மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது எனக்கூறியுள்ள அவர், இதனால் அந்நாடுகள் சிக்கல்களை சந்திக்கும் என தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 50 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனை டிரம்ப் ஆதரித்து வருகிறார். அவரது ஆதரவாளர்களும் அதனையே வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்நாட்டு உடனான இந்திய உறவு விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி சீனா சென்று அந்நாட்டு அ திபர் ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசியிருந்தார்.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: சர்வதேச சட்டம் என்ற நிலையில் இருந்து அனைவருக்கும் சமமான உரிமை உள்ளது. அனைவரும் அதே நிலையில் இருக்க வேண்டும்.இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகள், தனித்துவமான அரசியல் அமைப்புகள் மற்றும் உள்நாட்டு சட்டங்களை கொண்டுள்ளன. அவர்களை தண்டிக்க முயலும் தலைவர்களை கடினமான சூழ்நிலையில் ஆழ்த்தும். ஒருவர் தனது பலவீனத்தை வெளிப்படுத்தினால், அவர்களின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிடும்.

வரலாற்றில் நாடுகள் கடினமான சூழ்நிலைகளை கடந்துள்ளன. காலனித்துவம், இறையாண்மை மீதான தாக்குதல்களை நீண்ட காலம் சந்தித்துள்ளன. தற்போது காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது. தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இனி யாரும் ஆதிக்க தொனியில் பேச முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us