sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமலுக்கு வந்த பிக் பியூட்டில்புல் மசோதா; கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்திய டிரம்ப்

/

அமலுக்கு வந்த பிக் பியூட்டில்புல் மசோதா; கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்திய டிரம்ப்

அமலுக்கு வந்த பிக் பியூட்டில்புல் மசோதா; கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்திய டிரம்ப்

அமலுக்கு வந்த பிக் பியூட்டில்புல் மசோதா; கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்திய டிரம்ப்


ADDED : ஜூலை 05, 2025 08:08 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்காவில் 'ஒன் பிக் பியூட்டிபுல் பில்' என்ற வரிச்சலுகை மசோதாவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.

அதிபராக பொறுப்பேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அவரின் செயல்பாடுகள் பற்றிய விமர்சனங்கள் எழும் போது, இது அமெரிக்காவின் முன்னேற்றத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ற அவரின் ஆதரவாளர்களின் தரப்பில் இருந்து பரவலாக கருத்துகள் எழுந்தது.

அமெரிக்காவில் வரிகுறைப்பு மற்றும் அரசின் கடன் உச்சவரம்பை கொண்டு வர ஒன் பிக் பியூட்டில்புல் பில் என்ற மசோதாவை டிரம்ப் அறிமுகம் செய்தார். இந்த வரிச்சலுகை மற்றும் குடியேற்ற மசோதாவை தமிழில் பெரிய அழகான வரி என்றும் அழைக்கலாம்.

இந்த மசோதாவின் முதல் வரைவு மே மாதம் வெளியிடப்பட்டது. அந்நாட்டு மேலவையில் ஒப்புதல் பெறப்பட்ட இந்த மசோதா கீழவையிலும் நிறைவேறியது. இதையடுத்து, இந்த மசோதாவை அதற்கான விழாவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் முறைப்படி கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது;

இத்தனை மகிழ்ச்சியுடன் நமது நாட்டு மக்களை நான் இதற்கு முன் பார்த்தது இல்லை. நாங்கள் வாக்குறுதிகளை அளித்தோம். அவை நிறைவேற்றப்பட்டன. ஜனநாயகத்தின் பிறந்தநாளில் ஜனநாயகத்தின் வெற்றி இருக்கிறது, மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us