sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

975 பேரை துாக்கிலிட்ட ஈரான்

/

975 பேரை துாக்கிலிட்ட ஈரான்

975 பேரை துாக்கிலிட்ட ஈரான்

975 பேரை துாக்கிலிட்ட ஈரான்

16


ADDED : ஜூன் 20, 2025 01:09 AM

Google News

16

ADDED : ஜூன் 20, 2025 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: ஈரான் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு, 975 பேருக்கு கடந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றியிருப்பதாக ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேற்காசிய நாடான ஈரானில் உலகிலேயே அதிகளவு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இதுகுறித்து ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், அதன் துணை கமிஷனர் நட அல்நாஸிப் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:


ஈரானில் கடந்த 2024ல் மொத்தம் 975 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. துாக்கிலிடுவதன் வாயிலாக அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தலுக்காக 507 பேர்; கொலை குற்றங்களுக்காக 419 பேர்; பாலியல் குற்றங்களுக்காக 20 பேர்; நாட்டின் பாதுகாப்பு தொடர்பான குற்றங்களுக்காக 29 பேர் துாக்கிலிடப்பட்டுள்ளனர். இவர்களில் 31 பேர் பெண்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us
      Arattai