sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ராணுவ கூட்டமைப்பு உருவாக்க முஸ்லிம் நாடுகள் முடிவு

/

ராணுவ கூட்டமைப்பு உருவாக்க முஸ்லிம் நாடுகள் முடிவு

ராணுவ கூட்டமைப்பு உருவாக்க முஸ்லிம் நாடுகள் முடிவு

ராணுவ கூட்டமைப்பு உருவாக்க முஸ்லிம் நாடுகள் முடிவு


ADDED : செப் 17, 2025 02:10 AM

Google News

ADDED : செப் 17, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தோஹா:கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற அரபு - முஸ்லிம் நாடுகளின் அவசர உச்சி மாநாட்டில், 'நேட்டோ' போன்ற ராணுவ கூட்டமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர், இரண்டாண்டுகளை எட்டியுள்ளது.

இந்நிலையில், மற்றொரு அண்டை நாடான கத்தாரில் பதுங்கியுள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து, இஸ்ரேல் சமீபத்தில் வான்வழி தாக்குதலை நடத்தியது.

கண்டனம்



இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், அரபு லீக் எனப்படும் வளைகுடா நாடுகளின் அமைப்பு மற்றும் ஓ.ஐ.சி., எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த முஸ்லிம் நாடுகளின் அவசர கூட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கத்தாரின் கோரிக்கையை ஏற்று, இந்த அமைப்புகளைச் சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதி நிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஓமன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசித்தனர்.

சுழற்சி முறையில்



அப்போது, 'நேட்டோ' எனப்படும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அடங்கிய ராணுவ ஒத்துழைப்பு அமைப்பு போன்ற ஒரு ராணுவ கூட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தை எகிப்து முன்மொழிந்துள்ளது. அதன்படி, 22 அரபு லீக் நாடுகளும் சுழற்சி முறையில் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும்.

கத்தார் மீதான தாக்குதல், இனி வரும் நாட்களில் மேற்காசியாவில் கண்மூடித்தனமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியிருப்பதால், இப்போது மீண்டும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us