sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு ரூ.869 கோடி இழப்பு

/

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு ரூ.869 கோடி இழப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு ரூ.869 கோடி இழப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு ரூ.869 கோடி இழப்பு

7


ADDED : மார் 18, 2025 06:45 AM

Google News

7

ADDED : மார் 18, 2025 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ரூ. 869 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்தது. சொந்த மண்ணில் 29 ஆண்டுக்குப் பின் முதல் ஐ.சி.சி., தொடர் என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) ஆடம்பரமாக தயாரானது. கராச்சி, லாகூர், ராவல்பிண்டி மைதானங்களை தயார்படுத்த, நிர்ணயிக்கப்பட்டதை விட 50 சதவீதம் அதிகமாக ரூ. 503 கோடி வரை செலவிட்டது.

போட்டிக்கு தயாராக ரூ. 347 கோடி செலவு செய்தது. ஆனால் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் ஒரு போட்டியில் மட்டும் (எதிர்-நியூசி.,) பங்கேற்றது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டி மழையால் முழுமையாக ரத்தாக, லீக் சுற்றுடன் வெளியேறியது. தவிர மழையால் கூடுதலாக இரு போட்டி ரத்தாகின.

இதனால் போட்டி நடத்தியதற்கு ஐ.சி.சி., தந்த கட்டணம், டிக்கெட், விளம்பரங்கள் வழியாக என மொத்தம் ரூ. 52 கோடி மட்டும் தான் பி.சி.பி.,க்கு கிடைத்தது. சுமார் ரூ. 869 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து 'தி டெலிகிராப்' பத்திரிகை வெளியிட்ட செய்தியில்,' சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, தேசிய 'டி-20' சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் சம்பளம் 90 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் 'பட்ஜெட்' ஓட்டலில் தங்க வைக்கப்படுவர்,' என தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us