sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியாவுடன் சுமூகத்தீர்வு பாக்., பிரதமர் வலியுறுத்தல்

/

இந்தியாவுடன் சுமூகத்தீர்வு பாக்., பிரதமர் வலியுறுத்தல்

இந்தியாவுடன் சுமூகத்தீர்வு பாக்., பிரதமர் வலியுறுத்தல்

இந்தியாவுடன் சுமூகத்தீர்வு பாக்., பிரதமர் வலியுறுத்தல்


ADDED : மே 17, 2025 06:25 AM

Google News

ADDED : மே 17, 2025 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத : “இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்னைகளை அமைதியான முறையில் இருதரப்பும் அமர்ந்து பேசி சுமூகத்தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:

இந்தியா - பாகிஸ்தான் இடையே மூன்று போர்கள் நிகழ்ந்துள்ளன. இதன் வாயிலாக, இருதரப்பும் எதுவும் பயனடையவில்லை. எனவே, அண்டை வீட்டார் போல் அமைதியான முறையில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னைகளை அமர்ந்து பேசி, சுமூகத்தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, ஜம்மு - காஷ்மீர் விவகாரம் பற்றியும் பேசி தீர்க்க வேண்டும்.

பாகிஸ்தான், அமைதியான நாடு. எனினும், நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், அதற்குரிய பதிலடியை ராணுவம் வாயிலாக அளிப்போம்.

இந்தியாவின் தாக்குதலை எதிர்த்து, நம் நாட்டின் படைவீரர்களும், ஒட்டுமொத்த தேசமும் போரிட்ட விதம் ஒப்பற்றது. நம் நாட்டின் ராணுவ வரலாற்றில் இது ஒரு பொன்னான அத்தியாயம்.

இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவினால், பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us
      Arattai