sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்: உலக சுகாதார அமைப்பில் இந்திய தூதர் கண்டனம்!

/

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்: உலக சுகாதார அமைப்பில் இந்திய தூதர் கண்டனம்!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்: உலக சுகாதார அமைப்பில் இந்திய தூதர் கண்டனம்!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்: உலக சுகாதார அமைப்பில் இந்திய தூதர் கண்டனம்!

2


ADDED : மே 22, 2025 11:15 AM

Google News

2

ADDED : மே 22, 2025 11:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்திய தூதர் அனுபமா சிங், 'பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது,' என்று குற்றம் சாட்டி உள்ளார்.

உலக சுகாதார அமைப்பில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் அனுபமா சிங் பேசியதாவது: பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தைத் தொடங்கியது. இதன்படி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் தாக்கப்பட்டன. பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். பாகிஸ்தானால் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக தவறான தகவலை பாகிஸ்தான் பரப்புகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்திய தூதர் அனுபமா சிங் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.






      Dinamalar
      Follow us