sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

போர் ஒருபோதும் ஜனநாயகத்தை கொண்டு வராது; நோபல் பரிசு வென்ற ஈரான் போராளி வேதனை

/

போர் ஒருபோதும் ஜனநாயகத்தை கொண்டு வராது; நோபல் பரிசு வென்ற ஈரான் போராளி வேதனை

போர் ஒருபோதும் ஜனநாயகத்தை கொண்டு வராது; நோபல் பரிசு வென்ற ஈரான் போராளி வேதனை

போர் ஒருபோதும் ஜனநாயகத்தை கொண்டு வராது; நோபல் பரிசு வென்ற ஈரான் போராளி வேதனை

6


ADDED : ஜூன் 23, 2025 03:09 PM

Google News

6

ADDED : ஜூன் 23, 2025 03:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்; போர் ஒருபோதும் ஜனநாயகத்தை கொண்டு வராது என்று நோபல் பரிசு பெற்றவரும், ஈரான் மனித உரிமை போராளியுமான நர்கீஸ் முகமதி தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக அந்நாடு மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போர் இன்னமும் ஓயவில்லை. இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வரும் அதே நேரத்தில் அமெரிக்காவும் போரில் குதித்துள்ளது.

உலக நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மனித உரிமை ஆர்வலர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நோபல் பரிசு பெற்றவரும், ஈரானில் மகளிர் உரிமைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடி வரும் நர்கீஸ் முகமதி போரை கண்டித்துள்ளார். இவர் 2023ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர்.

இஸ்ரேல், ஈரான் போர் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது; நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். போர் ஒருபோதும் ஜனநாயகத்தை கொண்டு வராது. மனித உரிமைகள், சுதந்திரம் என எதையும் போர் தராது. அமெரிக்காவின் குண்டுகளினால் ஈரான் மக்களுக்கு விடுதலை கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us