மனநலனை பாதிக்கும் காற்று மாசு: உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை

28-டிச-2025

டில்லியில் நிலவும் காற்று மாசு குறித்து 'எமோநீட்ஸ்' என்ற உளவியல் ஆலோசனை வழங்கும் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை குறித்து பார்ப்போம்.

28-டிச-2025

தற்போது டில்லியில் நிலவும் காற்று மாசு பெரும்பாலும் நுரையீரலையே பாதிப்பதாக பலர் தெரிவித்துள்ளனர் .

28-டிச-2025

ஆனால் மாசு அதிகம் உள்ள நாட்களில் பலர் எரிச்சல், அமைதியின்மை, மனச்சோர்வு, மன இறுக்கத்தை உணர்கின்றனர். உடல்நல பிரச்னைக்கு இணையாக மனநல பாதிப்பும் அச்சுறுத்தலாக உள்ளது.

28-டிச-2025

காற்று மாசுக்கும் அறிவுத்திறன் குறைவது, நரம்பியல் கோளாறுக்கும் தொடர்பு உள்ளதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதனால் குழந்தைகள், முதியோர், ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

28-டிச-2025

கவனச்சிதறல் ஒருவர் காற்று மாசு சூழலில் நீண்டகாலமாக இருந்தால், அவருக்கு அல்சைமர் எனும் மறதி நோய், பார்கின்சன் எனும் நடுக்கம் போன்ற நரம்பியல் நோய்களுக்கு வழிவகுக்கும்.

28-டிச-2025

மாசு நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் குறைவு, நினைவாற்றல் பிரச்னை, ஏ.டி.எச்.டி., எனப்படும் கவனச்சிதறல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

28-டிச-2025

காற்று மாசு உடலில் கார்ட்டிசால் எனும் ரசாயன அளவை உயர்த்தி, மனநிலையை பாதிக்கும். தொடர்ந்து இது நிகழும் போது நாள்பட்ட மன அழுத்தம் ஏற்படும் என அறிக்கை கூறுகிறது.

28-டிச-2025