மாரத்தான் ஓட்டத்தின்போது கவனம் தேவை

17-மார்-2025

மாரத்தான் ஓட்டத்தின் போது சிலர் மயங்கி விழுந்து உயிரிழக்கின்றனர். வேகமாக ஓடும் போது, இதயத் தசைகள் ஓரளவிற்கு மேல் சுருங்காது.

17-மார்-2025

ரத்த ஓட்டமின்றி மூளை, சிறுநீரகங்கள் முதலில் பாதிக்கப்படும். மயக்கம் வந்து கீழே விழுந்து விடுவர். இதயத்திற்கு சிறிது நேரம் ஓய்வு தந்தால் மட்டுமே இயல்பாக ரத்தம் வெளியேறும்.

17-மார்-2025

இதயத்தின் தசைகள் சுருங்கி விரியும் தன்மை தான் அதனுடைய திறனை காட்டுகிறது. இதய அறைகளின் செயல்பாட்டை பொருத்தே தசைகளின் தடிமன் இருக்கும்.

17-மார்-2025

தடகள வீரர்கள் உட்பட கடினமான பயிற்சி செய்பவர்களுக்கு, இதயத் தசைகள் தடிக்கும். எனவே, எதிர்பாராத சமயங்களில் மயக்கம் வரும்.

17-மார்-2025

உடல் தகுதி, இதய ஆரோக்கியம் பற்றி தெரியாமலேயே பலரும் சென்று மாரத்தானில் கலந்து கொள்கின்றனர்.

17-மார்-2025

பிறவியிலேயே வால்வு சுருங்கி இருந்தால், ஆரம்பத்தில் எதுவும் தெரியாது. 20 வயதிற்கு மேல், தடகள விளையாட்டு, ஜிம்னாஸ்டிக், நடனம் என்று ஆடும் போது, மயங்கி விடுகின்றனர்.

17-மார்-2025

நடை பயிற்சி தான் இதயத்தை சீரான நிலைக்கு கொண்டு வரும். இதயத் தசைகள், இதயம், நுரையீரல் செயல்பாடு சீராக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

17-மார்-2025

ரத்த நாளங்கள், இதய அறைகள் நன்றாக இருக்கிறதா என்று உறுதி செய்த பின் ஓடலாம்.

17-மார்-2025

ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஓடும் போது, காற்று சரியாக இருக்காது. ஈரப்பதம் அதிகமுள்ள கடற்கரை காற்றில் ஆக்ஸ்சிஜன் குறைவாக இருக்கும்.

17-மார்-2025