காபி டம்ளரை கையில் எடுக்கும் முன்...!

24-அக்-2024

மிக உயர் ரத்த அழுத்தம் இருந்து, ஒரு நாளைக்கு 2 அல்லது அதற்கு மேல் காபி அருந்துவதால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பலவித இதய நாளக் கோளாறுகளால் இறக்கும் வாய்ப்பு இரட்டிப்பாகிறது.

24-அக்-2024

கடந்தாண்டு ஜப்பானில் நடந்த ஆய்வின் படி, அதீத ரத்த அழுத்தம் இருந்தவர்கள், 1 நாளில் 2க்கும் அதிகமான காபி அருந்தியதால், உயிரிழக்கும் வாய்ப்பு, காபி குடிக்காதவர்களை விட 2 மடங்கு அதிகம்.

24-அக்-2024

ஒரு வேளை மட்டும் காபி, பலமுறை கிரீன் டீ குடித்தவர்களுக்கு உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கவில்லை.

24-அக்-2024

சராசரியாக அல்லது குறைந்த அளவு உயர் ரத்த அழுத்தம் இருந்தவர்களுக்கு இதற்கான அபாயமே ஏற்படவில்லை.

24-அக்-2024

ஆய்வின் முடிவில், மிக அதிக அளவில் உயர் ரத்த அழுத்தம் இருந்தால், காபியை தவிர்ப்பது நலம்.

24-அக்-2024

காபியிலுள்ள, 'காபின்' என்ற வேதிப் பொருள், காபியில் உள்ள பாதுகாப்புத் தன்மையையும் மீறி பாதிப்பை தரலாம் என்பது தான் இதற்கு காரணம்.

24-அக்-2024