வீட்டில் சமைத்து உண்பது குறைந்தது... கடைகளில் உண்பது 50% அதிகரிப்பு !

11-ஏப்-2024

இந்தியாவில் கடந்த நிதியாண்டில், மாதாந்திர உணவு பட்ஜெட்டில், 50 %, பதப்படுத்தப்பட்ட உணவுகள், உணவகங்கள் மற்றும் உணவு வினியோக சேவைகளில் அதிக வருவாய் கொண்டவர்கள் செலவழித்துள்ளனர்.

11-ஏப்-2024

பத்து ஆண்டுகளுக்கு முன் இதற்கான செலவு என்பது, 41.2 சதவீதமாக இருந்தது.

11-ஏப்-2024

இதேபோல், நடுத்தர வருவாய் கொண்ட மக்கள் இதற்கு செலவு செய்வதும், 16 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

11-ஏப்-2024

பதப்படுத்தப்பட்ட உணவுகள் வாங்குவதும், வெளியே உண்பதும் அதிகரித்துள்ள நிலையில், வீட்டில் சமைப்பது கணிசமாக குறைந்துள்ளது.

11-ஏப்-2024

உணவு வினியோக சேவைகள் மற்றும் வணிக செயலிகள் அதிகரிப்பு, வருவாய் அதிகரிப்பு, மாறும் உணவு விருப்பங்கள் ஆகியவற்றின் காரணமாக, இந்த போக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

11-ஏப்-2024

பருப்பு, முட்டை, மீன் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு செலவழிப்பது குறைந்துள்ளது.

11-ஏப்-2024

இது, அதிக வருவாய் ஈட்டுபவர்கள், தங்கள் வீட்டில் சமைப்பதை தவிர்த்து வருவதையே காட்டுவதாகவும், அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

11-ஏப்-2024