தொற்று நோய் பரவலா? இணையவழியில் புகார் செய்யலாம்!

22-மார்-2024

கோடைக்காலம் ஆரம்பித்ததும் காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி, அம்மை ஆங்காங்கே தமிழகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது.

22-மார்-2024

குடியிருப்புப் பகுதிகளில் பரவும் தொற்று நோய், காய்ச்சல் பாதிப்புகள் குறித்து சுகாதாரத் துறைக்கு பொதுமக்களே தகவல் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

22-மார்-2024

சுகாதார இணையதளம் (ஐஹெச்ஐபி), ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்ட (ஐடிஎஸ்பி) இணையதளங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

22-மார்-2024

நோய்ப் பரவல் குறித்து பொதுமக்களே நேரடியாகத் தெரிவிக்கும் வகையிலான இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

22-மார்-2024

இப்பிரச்னைகளுக்கு https://ihip.mohfw.gov.in/cbs/#!/ என்ற இணையதளம் வாயிலாக, பொது சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

22-மார்-2024

அதன்படி, இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

22-மார்-2024

இதன் வாயிலாக, சம்பந்தப்பட்ட பகுதியில், சுகாதாரத் துறையினா் விரைந்து கள ஆய்வு செய்து நோய் பரவலைக் கட்டுப்படுத்துவா்.

22-மார்-2024

இந்த இணையதள வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி நோய் பரவலை கட்டுப்படுத்தலாம்.

22-மார்-2024