நரம்பு மண்டலத்தை முடக்கி உயிர் குடிக்கும் ஜி.பி.எஸ்., பாதிப்பு

28-ஜன-2025

ஜி.பி.எஸ்., எனும் 'கிலன் பா சிண்ட்ரோம்' ஒரு அரியவகை நரம்பியல் கோளாறு. இதில் புற நரம்பு மண்டலம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் தாக்கப்படுகிறது.

28-ஜன-2025

உடலின் தசை இயக்கத்தை கட்டுப்படுத்தும் நரம்புகளை பாதிக்கிறது. தொடுதல், வெப்பநிலை, வலி உணர்வுகள் உள்ள நரம்புகளின் செயல்பாட்டை முடக்கி, கால்கள் / கைகளில் உணர்திறன் இழக்கச் செய்கிறது.

28-ஜன-2025

இதனால், தசை பலவீனம், சுவாசிப்பதிலும், விழுங்குவதிலும் சிரமம் ஏற்படுகிறது.

28-ஜன-2025

இந்நோய்க்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்படாவிட்டாலும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், தடுப்பூசி போட்டவர்கள், பெரிய ஆப்ரேஷன் செய்தவர்களுக்கு பாதிப்பு உண்டாகிறது.

28-ஜன-2025

பாதிப்பு ஏற்படும்போது, உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மிகத் தீவிரமாக செயல்படுவதால், அது நரம்பு மண்டலத்தை முடக்குவதாகக் கூறப்படுகிறது.

28-ஜன-2025

சுகாதாரமற்ற உணவு, குடிநீர் உட்கொள்வதால் உண்டாகும் பாக்டீரியா தொற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, கை, கால்களில் திடீர் பலவீனம் ஆகியவை முக்கிய அறிகுறிகள்.

28-ஜன-2025

மஹாராஷ்டிராவின் புனேவில், இந்த ஜி.பி.எஸ்., பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது; இதுவரை 101 பேர் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

28-ஜன-2025

இது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தொற்று நோய் இல்லை என்பதால், அச்சப்படத் தேவையில்லை என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

28-ஜன-2025