இருமலை விரட்டும் சித்தரத்தை... இன்னும் பயன்கள் உண்டு!!

24-பிப்-2025

சிலருக்கு உடல்சூடு காரணமாகவும் இருமல் தோன்றும். அப்போது சித்தரத்தையுடன், சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து சுவைக்க வேண்டும்; இதுவும், இருமலை போக்கும் சிறந்த மருத்துவம்.

24-பிப்-2025

இருமல் ஏற்படும் போது, சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு மென்மையாக சுவைக்க வேண்டும். காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை, அப்போது தோன்றி, இருமல் நின்று விடும்.

24-பிப்-2025

குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும் போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்க வேண்டும்.

24-பிப்-2025

சித்தரத்தை சிறந்த மணமூட்டி. சிறு துண்டை வாயில் இட்டு சுவைத்தால், வாய் நாற்றம் நீங்கும். ஈறுகளில் உள்ள நோய்த்தொற்றும் சீராகும்.

24-பிப்-2025

வாகனங்களில் பயணம் செய்யும்போது, வாந்தி ஏற்படும். அந்த தொந்தரவு இருப்பவர்கள் பயணம் செய்யும் போது சிறு துண்டு சித்தரத்தையை, வாயில் இட்டு சுவைத்துக் கொண்டிருந்தால் வாந்தி வராது.

24-பிப்-2025

கொழுப்பு சத்தை கரைக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. நாக்கு வறட்சியை அறவே நீக்கும்.

24-பிப்-2025

சித்தரத்தை, பனங்கற்கண்டு ஆகியவற்றை சம அளவு எடுத்து கஷாயம் வைத்து, மூன்று வேளைக்கு தொடர்ந்து உட்கொண்டு வந்தால், வரட்டு இருமல், சளி குணமாகும்.

24-பிப்-2025