ஆழியை பாதுகாப்போம்... இன்று உலக பெருங்கடல் தினம்

08-ஜூன்-2025

பூமியில் 70 சதவீதம் கடல் தான் உள்ளது. பூமியின் மொத்த ஆக்சிஜனில் 50 சதவீதம் கடல் மூலம் கிடைக்கிறது.

08-ஜூன்-2025

கடல், கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ல் உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப் படுகிறது.

08-ஜூன்-2025

உலகின் சரக்கு போக்குவரத்து கடலில் தான் அதிகம் நடக்கிறது. உலகில் 10 கோடி பேர் தினமும், உணவு, வருமானத்துக்கு கடலை நம்பியே உள்ளனர்.

08-ஜூன்-2025

52 சதவீத மீனவர்களுக்கு கடல் தான் வாழ்க்கை. 20 சதவீதம் பேர் ஓரளவிற்கும், 19 சதவீதம் பேர் மறைமுகமாகவும் கடல் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

08-ஜூன்-2025

சில இடங்களில் கடலில் இருந்து குடிநீர் சுத்திகரிக்கப்படுகிறது. கடலில் பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. பவளப்பாறைகள், பனிப்பாறைகள் ஆகியவையும் கடலில் உள்ளன.

08-ஜூன்-2025

கடலில் கலக்கும் எண்ணெய் கசிவு, தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆகியவை கடலில் கலந்து, அதன் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன.

08-ஜூன்-2025

பல வழிகளிலும் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை அளிக்கும் ஆழியை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.

08-ஜூன்-2025