மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் மருத்துவ மாணவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

16-ஆக்-2024

25,590 இளங்கலை மாணவர்கள், 5,337 முதுகலை மாணவர்களிடம், மனஅழுத்தம் உள்ளதா என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ஆய்வு நடத்தியுள்ளது.

16-ஆக்-2024

அந்த ஆய்வறிக்கையில் 25 சதவீத இளங்கலை மருத்துவ மாணவர்களும் (யு.ஜி.,), 15 சதவீத முதுகலை மருத்துவ மாணவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

16-ஆக்-2024

கடந்த 12 மாதங்களில் 16.2 சதவீத மருத்துவ மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.

16-ஆக்-2024

குறிப்பாக, 5,337 முதுகலை மாணவர்களில் 10 சதவீதத்திற்கு அதிமான மாணவர்கள் தற்கொலை முயற்சிகளுக்கு திட்டமிட்டுள்ளதாக ஒப்புக்கொண்டனர்.

16-ஆக்-2024

25 சதவீத இளங்கலை மருத்துவ மாணவர்களும் (யு.ஜி.,), 15 சதவீத முதுகலை மருத்துவ மாணவர்களும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

16-ஆக்-2024

டாக்டர்கள் வாரத்திற்கு 74 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது. வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் தினசரி எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.

16-ஆக்-2024

தனியாக மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்களால் மன அழுத்தத்தில் உள்ளாகியுள்ளனர்.

16-ஆக்-2024

அரசு மருத்துவ கல்லூரிகளில் பணி நேரத்தில் ஆசிரியர்கள் பணியில் இல்லாமல் தனியார் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

16-ஆக்-2024

முதுகலை மாணவர்களுக்கு விடுதி வசதிகள் திருப்தி அளிக்கவில்லை. இதில் 50 சதவீதம் பேர் ஏழைகள். இவ்வாறு அவர்களின் மன அழுத்ததிற்கான காரணங்கள் அதில் கூறப்பட்டுள்ளது.

16-ஆக்-2024