இன்று தேசிய சட்ட சேவைகள் தினம்!

இந்தியாவில் அனைவருக்கும் நியாயமான நீதி நடைமுறை கிடைப்பதை வலியுறுத்தி நவ. 9ல் தேசிய சட்ட சேவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்திய சட்ட உதவிகள் ஆணைய சட்டம் 1995 நவ. 9ல் அமலுக்கு வந்தது.

இதை நினைவுபடுத்தும் விதமாக இத்தினம் தொடங்கப்பட்டது.

குறிப்பாக உச்ச நீதிமன்றம் சட்ட சேவைகள் அதிகாரசபைச் சட்டத்தை நிறைவேற்றியதைக் கவுரவிக்கவும் தேசிய சட்ட சேவைகள் தினத்தை நிறுவியது.

இச்சட்டத்தின் பல்வேறு விதிகள், வழக்கு தொடுப்பவர்களின் உரிமை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம்.

மேலும் சட்ட சேவைகள் அதிகாரிகள் சட்டத்தின் பல்வேறு விதிகள் மற்றும் வழக்குரைஞர்களின் உரிமைகள் பற்றிய பொது அறிவை வளர்ப்பதற்கும் உதவுகிறது.

மேலும் தேவைப்படுபவருக்கு இலவச சட்டஉதவி, ஆலோசனை உள்ளிட்ட நடவடிக்கைகளை தேசிய சட்ட உதவிகள் ஆணையம் மேற்கொள்கிறது.