இன்று உலக மனநல தினம்

10-அக்-2025

மனதளவில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்.10ல் உலக மனநல தினம் கடைபிடிக்கப்படுகிறது.

10-அக்-2025

ஒருவர் முழுமையான வேலை திறனை வெளிப்படுத்த அவர் உடலாலும், மனதாலும் முழு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

10-அக்-2025

வேலைப்பளு சார்ந்த மன அழுத்தம் காரணமாக, மனச்சோர்வு, மனப்பதற்றம், அச்சம், எரிச்சல், கோபம், புலம்பல் ஏற்படுகிறது.

10-அக்-2025

இதனால் எதிர்மறை எண்ணங்கள், அழுகை, ஆத்திரம், உடல் பருமன் அல்லது எடை குறைவு போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

10-அக்-2025

இது, அவர்களின் உடல், மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அவர்களின் வேலைத்திறன், வேலை சார்ந்து முடிவு எடுக்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

10-அக்-2025

மன ஆரோக்கியம் இல்லாமல், உடல் ஆரோக்கியம் சாத்தியமில்லை.

10-அக்-2025

தினசரி உடற்பயிற்சி, தியானம், யோகா, சரியான நேரத்தில் சரிவிகித உணவை உட்கொள்ளுதல், சரியான துாக்கம் மிக மிக முக்கியம்.

10-அக்-2025

'சேவைகளுக்கான அணுகல் - பேரழிவு, அவசர நிலையில் மனநலம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

10-அக்-2025