ராமகிருஷ்ணர் பொன்மொழிகள்…

10-ஏப்-2024

நான் பெரிய பணக்காரன் என்று ஒரு போதும் பெருமை பேசாதே. நட்சத்திரங்களின் பிரகாசத்தின் முன், மின்மினிப்பூச்சியின் கர்வம் காணாமல் போய் விடும்.

10-ஏப்-2024

இயற்கையின் பேராற்றலின் முன், நம்முடைய செல்வமும் செல்வாக்கும் மிக அற்பமானவை.

10-ஏப்-2024

நீ இறைவனைத் தேட விரும்பினால், முதலில் மனிதனைத் தேடு. தெய்வீகசக்தி மற்ற எல்லா பொருளைக் காட்டிலும் மனிதனிடமே விசேஷமாக இருக்கிறது.

10-ஏப்-2024

சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, அன்றாடப் பணிகளைத் தொடங்குபவன் வாழ்வில் வெற்றி பெறுவது போல, சிறுவயதில் இருந்தே ஆன்மிக நாட்டத்தை வளர்த்துக் கொள்பவன் இறைவனை அடைவது உறுதி.

10-ஏப்-2024

உலக ஆசைகளின் நடுவில் இருந்து கொண்டே மனதைக் கட்டுப்படுத்த பழகியவனே உண்மையில் வீரன்.

10-ஏப்-2024

மனத்தூய்மை பெற்றவனின் வாய் வார்த்தைகள் மந்திரம் போல காந்தசக்தி பெற்றுவிடும்.

10-ஏப்-2024

புகழுக்காகவோ, புண்ணியத்திற்காகவோ பிறருக்கு உதவி செய்யக்கூடாது.

10-ஏப்-2024

மனிதவாழ்வில் எண்ணமும், செயலும் முரண்படக் கூடாது. எண்ணத்தின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது.

10-ஏப்-2024