இன்று ரமண மகரிஷி பிறந்த தினம்! அவரின் சிந்தனைகள் சில...

30-டிச-2024

மன அடக்கம் எளிதில் உண்டாகாது. பொறுமையே வெற்றிக்கு அடிப்படை.

30-டிச-2024

நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனம் உலகில் இல்லை. ஒரே மனதில் தான் இருவித பண்புகளும் இருக்கின்றன.

30-டிச-2024

உழன்று கொண்டேயிருக்கும் மனதை தியானம் மூலம் வசப்படுத்த முடியும்.

30-டிச-2024

மற்றவருக்கு நன்மை செய்யத் தொடங்கினால் உள்ளத்தில் அன்பு, கருணை முதலிய நற்பண்புகள் வளரத் தொடங்கும்.

30-டிச-2024

முதலில் உன்னைத் திருத்திக் கொள். அதன் பின் சமுதாய சீர்திருத்தம் தானே நிகழ்வதைக் காண்பாய்.

30-டிச-2024

பிறருக்கு சேவை செய்வதன் மூலம் மனிதன் தனக்குத் தானே உதவி செய்து கொள்கிறான்.

30-டிச-2024

அமைதியும், துாய்மையும் மனதில் இருக்குமானால் செயல் அனைத்தும் நல்லதாகவே இருக்கும்.

30-டிச-2024